விழுப்புரம், நவ. 28- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி யில் மகளிர் சுய உதவி குழு உறுப்பி னர்களுக்கு கரும்பு பரு சீவல் நாற்றங்கால் உற்பத்தி பற்றிய ஒரு நாள் பயிற்சி நடை பெற்றது. இளைஞர்கள் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2024-25 ஆம் ஆண்டு செயல் திட்டத்தின் அடிப்படையில் கரும்பு பரு சீவல் நாற்றங்கால் உற்பத்தி செய்தல் தொடர்பாக சுய உதவி குழு மகளிர் விவசாயிகளால் உயர் மகசூல் தரும் கரும்பு ரகங்கள் பரு நாற்றங்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி அதிகம் மேற்கொள்ளும் விக்கிரவாண்டி வட்டாரத்தில் கரும்பு சாகுபடிக்கு அனு பவம் கொண்ட சுய உதவி குழு மகளிர் விவசாயிகளை தேர்வு செய்து ஒரு நாள் பயிற்சியாக முண்டியம்பாக்கம் ராஜ ஸ்ரீ சர்க்கரை ஆலை முண்டியம்பாக்கத்தில் நவ.27 ஆம் தேதி பயிற்சி அளித்தனர். கரும்பு பரு நாற்றுகள் பண்ணை உற்பத்தி பற்றிய முக்கியத்துவம், விதை கரும்பு தேர்வு, கரும்பிலிருந்து பருக்களை சேதம் இன்றி கருவி மூலம் பிரித்து எடுத்தல், விதை நேர்த்தி செய்தல், பராமரித்தல், குழித்தட்டின் குழிகளில் கரும்பு பருக்களை கொண்டு நிரப்பி பின்னர் பருக்கள் மேல் நோக்கி இருக்குமாறு அடுக்கி பராமரித்தல், தண்ணீர் தெளித்து பராமரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட கரும்பு நாற்று களை நிலத்தில் படுக்கைகளை தயார் செய்து நடுதல் கரும்பு சாகுபடி உற்பத்தி செலவை குறைத்து அதிக லாபத்தை ஈட்டுவதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் குறித்து பயிற்சி அளித்தனர்.