திருவண்ணாமலை, ஜூன் 25 - திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா தரணி சக்கரை ஆலை நிர்வா கம் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய கரும்பு பண பாக்கியை வட்டியுடன் வழங்கிட கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளித்து ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. போளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கே. பாலமுரு கன் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்று கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன் சிறப்புரை யாற்றினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாண்டுரங்கன் எஸ். வேல்மாறன், பெ.அரி தாசு, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அ.உதயகுமார், பி.கிருஷ்ணமூர்த்தி, ஜோதி, ஆர். சிவாஜி, ஆர். ரவிதாசன், டி .கே. வெங்கடேசன் உளிட்ட பலர் கலந்து கொண்டனர்.