சென்னை,செப்.28- சென்னை பாண்டிபஜார் நாயர் சாலையில் வியாழனன்று திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழம், 6 அடி அகலத்துக்கு ஏற்பட்ட இந்த பள்ளத் தால் அந்த வழியாக சென்றவர்கள் பீதி அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் போக்கு வரத்து காவல்துறையினர் விரைந்து சென்று பள்ளத்தை சுற்றி தடுப்புகளை அமைத்த னர். இதனால் நாயர் சாலையில் போக்கு வரத்து தடைப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. கழிவுநீர் கால்வாய் பணி கள் நடைபெற்று வருவதால் பள்ளம் ஏற்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.