சிதம்பரம், ஆக.8- காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது கொளக்குடி ஊராட்சி. அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 400- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் கொளக்குடி கிராமத்தில் 70 ஆண்டு களுக்கு மேலாக புழக்கத்தில் உள்ள சாலை யின் வழியாக தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். மேலும் கிராம பொது மக்கள் இந்த பொது வழியாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தனிநபர் ஒருவர் அந்த இடம் தனக்கு சொந்தம் என்று கூறியது டன் முள்வேலி போட்டு அடைத்து விட்டார். அந்த வழியை பயன்படுத்தி வந்த மாணவர்களும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலை மையிலான குழுவினர், இதுகுறித்து அதி காரிகளுக்கு தகவல் அளித்தனர். வட்டாட்சி யர், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வேலியைப் பிரித்து தருவதாக உறுதியளித்தனர்.