சென்னை,ஜூலை 22-
சென்னை சாலிகிராமம், கே.கே. சாலை முத்துராம லிங்கம் தெருவில் விருகம் பாக்கம் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது வாகன பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீ சார் மடக்கி பிடித்தனர். அவர்கள் கஞ்சா பொட்ட லங்கள் பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கஞ்சா கடத்தி வந்தது மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான பால் மாத்யூ மற்றும் ஹரிகிருஷ் ணன் என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சா, 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றை பறிமுதல் செய்த னர்.