புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சமர்பித்த மாணவர்கள்
சென்னை,பிப். 12- விவோ நிறுவனம், சிஐஇடி-என்சிஇஆர்டி, ஐஐடிஎம் பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, ஐநா குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான 3வது ‘விவோ இக்னைட் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி’யை நடத்துகிறது. மென்பொருள் - தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம், சமூக மேம்பாடு சம்பந்தமாக புதுமையான தீர்வுகளை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து விவோ மேற்கொள்ளும் இந்த முயற்சியானது புதுமைகளை ஊக்குவிப்பதோடு சமூகத்தில் சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறது. மேலும் பல்வேறு பின்னணிகளை கொண்ட மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் இந்த போட்டி முக்கிய பங்காற்றுகிறது. விவோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி கீதாஜ் சன்னானா கூறியுள்ளார்.
மர கைத்தொழில் வர்த்தக கண்காட்சி
சென்னை,பிப்.12- மர கைத்தொழில் மற்றும் பர்னீச்சர்கள் உற்பத்தியில் 25 ஆண்டுகளின் தொழில் முன்னேற்றங்களை மற்றும் வளர்ச்சியை கொண்டாடும் முக்கிய நிகழ்வான, இந்தியா வுட் 2025, என்ற மாபெரும் வர்த்தக கண்காட்சியானது மார்ச் 6-9, தேதிகளில் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. கிரேட்டர் நோய்டாவில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி உலகளாவிய மர கைத்தொழில்துறையில் முக்கிய மைல் கல்லாகும். இந்தியா உற்பத்தி சக்தியாகவும் மற்றும் பர்னிச்சர் மற்றும் மர கைத்தொழில் உற்பத்தியில் ஒரு முக்கிய உலகளாவிய நாடாக உருவெடுக்கும் அடையாளமாக இந்த கண்காட்சி அமைந்திருக்கும். இன்று, இந்தியா உலகளாவிய பர்னிச்சர் உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது. உற்பத்தியாகும் பொருட்களில் ஆண்டுக்கு 20 விழுக்காடு தனது பர்னிச்சர் பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
வண்டலூர் அருகே மின்சார ரயில் மோதி 2 பேர் பலி
சென்னை,பிப்.12- வண்டலூர் அருகே மின்சார ரயில் மோதி 2 பேர் பலியாகினர். சென்னை அடுத்த தாம்பரம் அருகே வண்டலூர் ரயில் நிலையத்துக்கும் பெருங்களத்தூர் ரயில் நிலை யத்துக்கும் இடையே தண்டவாளத்தில் இரண்டு சடலங்கள் கிடந்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற தாம்பரம் ரயில்வே போலீசார் தலை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் மற்றும் பெண் சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தண்ட வாளத்தில் இறந்து கிடந்த வர்கள் காட்டு மன்னார் கோவிலைச் சேர்ந்த விக்ரம் (21), கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலட்சுமி (22) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் வண்டலூர் அருகே தங்கி, தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருவது தெரிய வந்துள்ளது.
சென்னை துறைமுகம் வழியாக பச்சை பட்டாணி இறக்குமதி: 5 பேர் கைது
சென்னை, பிப். 12- துபாயிலிருந்து சென்னை துறைமுகம் வழியாக ரூ. 2 கோடி மதிப்புடைய பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் 3 சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மைசூர் பருப்பு எனக் கூறி ரூ. 2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மைசூர் பருப்பு எனக் கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது வருவாய் புலனாய்வு காவல் துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 சுங்கத்துறை அதிகாரிகளை கைது செய்தனர். மேலும் தில்லியைச் சேர்ந்த ஏற்றுமதி இறக்குமதியாளர்களான 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
63 நாயன்மார் சிலைகளை மாணவர்களை சுமக்க வைத்த தனியார் பள்ளி நிர்வாகம்
சேத்துப்பட்டு, பிப்.12 திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்கை சூடாமணி யில் உள்ள ஶ்ரீ சாந்தா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் மாணவர்களை பள்ளி நிர்வாகம் தவறாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. சமீபத்தில் கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் சேத்துப்பட்டில் நடைபெற்ற ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்காக இப்பள்ளியில் 9,10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 63 நாயன்மார்கள் சிலைகளை தூக்க வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர். அரசுப் பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளி யாக இருந்தாலும் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவவேண்டுமே தவிர ஆன்மிகம் போன்ற தனிப்பட்ட விஷ யங்களை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதே பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) குரு வந்தனம் என்ற பெயரில் மாணவர்களை வைத்து ஆசிரியர்களின் கால்களை கழுவும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக தாம்பாள தட்டு, பூ,சந்தனம் குங்குமம் போன்றவற்றை வாங்கி வருமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். எனவே மதச்சார்பற்ற முறையில் செயல்படவேண்டிய பள்ளிகள் இது போன்ற செயல்களை ஈடுபடுவதை தடுக்க பள்ளிக்கல்வித்துறையும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
விவசாயிகள் சங்க கிளை துவக்கம்
கிருஷ்ணகிரி, பிப்.12 - சூளகிரி வட்டம், உப்ப ரதம் மண்டர பள்ளியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க புதிய கிளை தொடங்கப்பட்டது. பெயர் பலகையை மாநில துணைச் செயலாளர் பி.பெருமாள் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ்,தலைவர் முரு கேசன் பொருளாளர் எம்எம்.ராஜு,மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் குமாரவடிவேல்,துணைத் தலைவர் குண்டப்பா,வட்டத் தலைவர் அஹ்மத் பாஷா, செயலாளர் முரளி, பொரு ளாளர் நாராயணப்பா,கிளை நிர்வாகிகள் தனபால்,சூரிய நாராயணன்,முருகேசன் கலந்து கொண்டனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் சிறு விவசாயி களுக்கு,நிலமற்ற புறம் போக்கில் குடியிருக்கும் மக்களுக்கு வீடு இல்லாத வர்களுக்கு இலவச வீட்டு மனை,பட்டா வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.