districts

img

சிபிஎம் அலுவலகம் கட்டுவதற்கு சேமிப்பு பணத்தை வழங்கிய மாணவர்கள்

திருவண்ணாமலை, டிச.23- திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலக கட்டிட கட்டுமானப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.  இந்நிலையில், சிபிஎம் சந்தவாசல் கிளையை சேர்ந்த எஸ். எஸ். வாசன் என்ப வரின் குழந்தைகள் எஸ். நபீனா, எஸ். நவினா, மற்றும் எஸ்.ரிஷிவாசன் ஆகிய மூவரும், சிறுக சிறுக உண்டியலில், தாங்கள் சேர்த்து வைத்த பணம் 7240 ரூபாயை,  முதல் தவணையாக போளூர் சிபிஎம் அலுவலக கட்டுமானத்திற்கு  நன்கொடையாக வழங்கினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், போளூர் வட்டச் செயலாளர் இரா. இரவிதாசன் ஆகியோரிடம் நிதியை வழங்கினர். அப்போது ,சந்தவாசல் சிபிஎம் கிளை செயலாளர் ம. சரவணன், மூத்த நிர்வாகி ம.ஜெயசீலன், பாஸ்கரன், கா.குமார், கண்ணன், நடராசன் ஆகியோர் உடனிருந்தனர்.