திருவண்ணாமலை, செப்.14- இந்தியன் வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியர் ப.க.கோவிந்தராஜன் தாயார் லட்சுமி அம்மாள் பட திறப்பு நிகழ்வு செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லட்சுமி அம்மாள் படத்தை திறந்து வைத்து, பள்ளி மாணவர்க ளுக்கு இலவச நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருட்கள் வழங்கப் பட்டது. மேலும் மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்று கள் நடும் நிகழ்வும் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி யில், திமுக மருத்துவரணி மாநில துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், கலசப் பாக்கம் சட்டமன்ற உறுப்பி னர் பெ.சு.தி.சரவணன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், புதுப்பாளை யம் ஒன்றிய தலைவர் சுந்தர பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், நிர்வாகிகள் ஏ .லட்சுமணன், காமராஜ், கணபதி, மருத்துவர்கள் ஆர்.ஏ.ஜீவானந்தம், ஜி. கே. சரோஜினி, எம். ஸ்ரீதர், நிதித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் அரங்கசாமி, சி.முனுசாமி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.