districts

img

வகுப்பறைக்குள் மழைநீர்: செங்கம் அருகே மாணவர்கள் அவதி

திருவண்ணாமலை, செப்.19-  திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் வட்டம், சின்ன கோளாப்பாடி கிராமத்தில் உள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இந்த ஆண்டு  ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 500 செலவில் சீரமைக்கப்பட்டது.  இந்த நிலையில், செப் 18 அன்று இரவு பெய்த மழையில், பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவர்கள் வகுப்பறையில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.