அண்ணல் அம்பேத்கரை இழிவுபடுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வியாழனன்று (டிச.19) சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் வர்ஷினி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ச.மிருதுளா, கிளைத் தலைவர் சுபஷி, கிளைச்செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பேசினர். அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.