districts

img

புதுச்சேரியில் பள்ளி சிறுமிக்கு பாலியல் சீண்டல் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி, பிப்.15- பள்ளி சிறுமி மீதான பாலியல் சீண்டலை கண்டித்து புதுச்சேரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். புதுச்சேரி தவளக்குப்பம் தானாம்பாளையம் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து நீதி விசாரணை நடத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். புதுகுப்பம் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து  படுகாயம் அடைந்த மூன்று மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். புதுச்சேரி கல்வித்துறையின் கீழ் உள்ள  பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆராய்ந்து சீரமைக்க  வேண்டும்.  புதுச்சேரி யில்  மாணவர்கள் பாதுகாப்பை அரசு, கல்வித்துறையும் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலி யுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் உள்ள கல்வித்துறை முன்பு நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு,இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சஞ்சய், மாணவர் சங்க செயலாளர் பிரவீன் குமார், நிர்வாகி கள் வந்தனா, ஸ்டீபன்ராஜ், அபிஜித், யுவராஜ், வர்மா, சுகவாணன், அரசன், பரிதா, ஹேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ராஜீவ்காந்தி பெண்கள் குழந்தைகள் மருத்துவமனை அருகில் இருந்து கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்தனர்.