வேலூர், மே 5- தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோடைகால பயிற்சி வகுப்புகள் “ஆயிரம் ஆயிரம் அறிவியல் திரு விழாக்கள்” என்ற தலைப்பில் தொடக்க, நடு நிலைப் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு 30 மையங்கள் விதம் 8 ஒன்றியங்களில் 250 மையங்களில் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி பள்ளிக் கல்வித் துறை யுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், இந்திய வளர்ச்சி இயக்கம் மற்றும் பரிக்ஷ்ன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. வேலூர் ஒன்றியம் ஊசூர் அடுத்த அரியூர் நம்பிராஜபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மாநகராட்சி 4ஆவது மண்டலக் குழு தலைவர் வெங்கடேசன் தலை மையில் நடைபெற்றது, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் முன்னாள் பொதுச் செயலாளர் பா.ராஜேந்திரன், துணைத் தலைவர்கள் செ.நா.ஜனார்த்தனன், கே.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த நிகழ்ச்சியில் அறிவியல் சோதனை கள், அறிவியல் அற்புதம், கணக்கும் இனிக் கும், கிராமத்தை அறிவோம், கற்பனையும் கைத்திறனும் மற்றும் பொது விளையாட்டு கள் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் க.முனுசாமி, வானவில் மன்ற கருத்தாளர் ர.அருணா, இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வ தொண்டர்கள் தீபா, மாலினி, பாரதி, சோனியா, லதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.