districts

img

மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குவது அவசியம் சாய் பல்கலை கழக கலந்துரையாடலில் வலியுறுத்தல்

சென்னை, மே.15

    மாணவர்கள் சுயமாக கற்றுக் கொள்ளும் சூழலை கல்வி நிலையத்தில் உரு வாக்கவேண்டியது அவசியம் என்று சட்டப்படிப்புக்கான முன்னணி கல்வி நிலையமான சாய் பல்கலை கழகம் தெரி வித்துள்ளது.

   பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சாய் பல்கலை கழகத்தில் எதிர்கால தலைவர்களை எவ்வாறு உரு வாக்குவது என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடலில் பேசியவர்கள் இவ்வாறு கூறினர்.

   இளங்கலை சட்டக்கல்வி. இளங்கலை, இளங்கலை அறிவியல் படிப்புகளில் சேரும் மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்து செயல்படும் திறனை பெறும் வகையில் அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி இருக்கவேண்டும் என்று கருத்து தெரி விக்கப்பட்டது.

  சுதந்திரமான கல்வி என்பது பரந்த அணுகுமுறையுடன் அறிவுசார்ந்த திறன்களை மேம்படுத்துவதாகவும் இருக்கிறது என்றும் இதில் பேசிய கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

   உலகில் நிலவும் உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் சமூகபொறுப்புடன் செயல்படவும் சுதந்திரமான கல்வி உதவும் என்று பல்கலை கழக நிறுவனர் கே.வி.ரமணி கூறினார்.   பேராசிரியர். ஜாம்ஷெட் பருச்சா பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பிடெக் மாணவர்கள் பட்டம் பெறுகிறார்கள்.

   ஆனால் அவர்க ளின் வழக்கமான மற்றும் மந்தமான கற்றல் முறையின் காரணமாக தொழில்நுட்பத் துறையில் வேலை செய்யக்கூடிய திறன் இல்லை என்றார்  மூன்று பள்ளிகளின் முதல்வர்களான டாக்டர் ரீனா படேல் (சட்டப் பள்ளி), டாக்டர் அகிலா ராம்நாராயண் (கலை மற்றும் அறிவியல் பள்ளி) மற்றும் டாக்டர் கவிதா தேஷ்பாண்டே (கணினி மற்றும் தரவு அறிவியல் பள்ளி) ஆகி யோர் உரையாற்றினர். இதில் மாண வர்கள். பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.