districts

img

கடற்கரையில் மாணவர்கள் தூய்மைப்பணி

திருவள்ளூர், அக் 24- பழவேற்காடு அருகில் உள்ள ஜமீலா பாத் கடலோரத்தில் கிடந்த  நெகிழிகளை யும், குப்பைகளையும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆர்வமுடன் அகற்றினர். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக கடற்கரை சுத்தம் செய்யும் பணியை திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டுநலப் பணித் திட்ட மாண வர்கள்  பழவேற்காடு பகுதி ஜமீலாபாத் கிராமத்தில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.  கல்லூரி முதல்வர்  முனைவர் ஆர்.ஜெய சகிலா கடற்கரை தூய்மை அவசியம் பற்றி கிராம மக்களுக்கு எடுத்துரைத்தார்.  இதில் முனைவர் பி.ரூபி, முனைவர் நிமிஸ்மோல் ஸ்டீபன், முனைவர் ஏ.கண்ணன்,  ரம்யா மற்றும் கிராம நிர்வாகிகள், இளை ஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தூய்மைப்பணியை உதவிப் பேராசிரியர் மற்றும் நாட்டுநலப்பணி  திட்ட அலுவலர்  முனைவர் இல. சுருளிவேல் ஒருங்கிணைத் தார்.