districts

img

சித்தலம்பட்டில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

விழுப்புரம்,அக்.9- விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தலம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் போதைப்பொருள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணிக்கு உதவி தலைமை ஆசிரியர் எஸ்.எஸ்.கலைச்செல்வி தலைமை தாங்கினார். கண்டமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார், நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர் மேத்தின் ஜாய் கிறிஸ்டி, உதவித்திட்ட ஆசிரியர் ஹென்றி , பட்டதாரி ஆசிரியர்கள் லோகநாதன், சந்தோஷ், பசுமைப்படை லட்சுமி பாய் ஆகியோர் உட்பட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.முடிவில் ஆசிரியர் லியோனஸ் நன்றி கூறினார்.