districts

துணைவேந்தர்களே பட்டமளிக்க மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சிதம்பரம், ஜூன் 29-

     பல்கலைக் கழகங்கள் ஆளுநருக்காக காத்திருக்காமல் துணைவேந்தர்களை கொண்டே மாணவர்களுக்கு பட்டமளிக்க வேண்டும் என்று மாணவர் சங்க கடலூர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.

    இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்டத் தலைவர்  சிவானந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் தலைவர்  சௌமியா வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேல் துக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் லெனின் வாழ்த்திப் பேசினார்.

   இந்த பேரவையில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக சிவானந்த், செயலாளராக ஆகாஷ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிளை அறிமுகம் செய்து  மாநிலத் தலைவர் அரவிந்தசாமி பேசினார்.

   பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வராமல் மாணவர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரசுப் பள்ளி கல்லூரிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பட்டம் வழங்க ஆளுநருக்காக காத்திருக்காமல் துணை வேந்தர்களே பட்டமளிப்பு விழா நடத்தி மாணவர்களுக்குப் பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.