அம்பத்தூர், அக். 7- பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அண்ணா நகரைச் சேர்ந்தவர் இளவரசி. இவருடைய மகன் தன்வந்த் (10) இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் சிறுவனை திருநின்றவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏற்பட வில்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மர்மக் காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.