தமிழ்நாட்டில் ஜனநாயக முறையில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் பேரவை தேர்தல் நடத்திட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாணவர் சங்கத்தின் மாநில துணை தலைவர் மு.தமிழ்பாரதி, மாவட்ட செயலாளர் இரா. தயாநிதி , மாவட்டத் தலைவர் மு.ஜோ. சத்யாதாஸ், கிளை நிர்வாகிகள் தருண், மணிகண்டன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.