சென்னை, ஜூன் 29 - ஆண்ட்ரூயூல் நிறுவன ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழி லாளர்கள் கூட்டு முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். ஒன்றிய அரசுக்கு சொந்தமான ஆண்ட்ரூயூல் அண்டு கம்பெனி லிட். என்ற பொதுத்துறை நிறுவனம் கந்தஞ்சாவடியில் (பழைய மகாபலிபுரம் சாலை) செயல்பட்டு வருகிறது. இங்கு உயர்மின்னழுத்த மின்மாற்றி களை (டிரான்ஸ்பார்மர்) தயாரிக்கப்படுகிறது. இத்தொழிற்சாலையில் சுமார் 70 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கென்று டிரான்ஸ்பார்மர் அண்டு சுவிட்ச்கியர் எம்பிளாயீஸ் யூனியன் (சிஐடியு) செயல்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் பல மாதங்கள் நடைபெற்றது. தொழிலாளர்கள் பல்வேறு வகைகளில் பழிவாங்கப்பட்டனர். இருப்பினும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஊதிய ஒப்பந்த உருவானது. தொழில் அமைதி நிலவி வந்த ்நிலையில், சங்கத்தின் முன்னணி ஊழியர்களை பழிவாங்கும் நோக்கோடு அடுத்தடுத்த நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது. இதன் தொடக்கமாக பொதுச் செயலாளர் பி.கருணாகரனை பணிநீக்கம் செய்துள்ளது. இதனை கண்டித்து சங்கத்தின் தலைவர் எஸ்.அப்பனு தலைமையில், புதனன்று (ஜூன் 29) தொழிலாளர்கள் தொழிற்சாலை அலுவலகம் எதிரே அமர்ந்து கூட்டு முறையீடு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.