districts

img

பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி போராட்டம்

கிருஷ்ணகிரி ஜூலை 3-  தேன்கனிக்கோட்டை வட்டம் தளி, கெலமங்கலம் ஒன்றியங்களிலும், சூளகிரி வட்டத்திலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 2500 மலைவாழ் பழங்குடி இருளர் குடும்பங்கள் ஆங்காங்கு குடிசைகள் போட்டு வாழ்ந்து வருகின்றனர்.  குடியிருக்க சொந்த வீடு நிலம் இல்லா மலும் ரேஷன் அட்டை,ஆதர அட்டை,சாதி சான்று, அடிப்படை வசதிகள், குடிநீர், மின்சாரம் எதுவும் இல்லாமல் சொந்த  நாட்டிலேயே  அகதிகள் போல வாழ்கின்ற னர். அரசால் சில பகுதிகளில் 25 ஆண்டு களுக்கு முன்பு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு வீடுகளும் முற்றிலும் சிதில மடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள் எதுவும் பழுது பார்த்து தரப்படவில்லை. பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் கூட கிடைப்பதில்லை.ஆங்காங்கு குட்டைகளில் குழிகளில் தேங்கியுள்ள, கால்வாயில் ஓடும் சுகாதாரமற்ற தண்ணீரையே பயன்படுத்தி இருட்டில் வாழ்கின்றனர். மாவட்டம் முழுவதும் இது குறித்த  கோரிக்கை மனுக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை கொடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 2006 வன உரிமை சட்டத்தின்  படி பழங்குடி மக்களின் அனுபவ நிலங்களுக்கு, வீட்டு மனைக்கு பட்டாக்கள், சாதி சான்றுகள், ரேஷன், ஆதார் அட்டைகள்  வழங்கிடு, காவேரி தெற்கு 17 வது வனவிலங்கு சரணாலயம் அமைப்பதாக கூறி  பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடி மக்களை, கிராமங்களை அப்புறப் படுத்துவதை கைவிடு, வனங்களில் ஆடு மாடுகள் மேய்த்திட, சிறு மகசூல் எடுத்திட அனுமதி வழங்கிடு, படித்து பட்டம் பெற்ற  முதல் தலைமுறை பழங்குடி  மாணவர் களுக்கு அரசு வேலை வழங்கிடு, அனைத்து  மலை கிராமங்களிலும் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்திடு, மக்கள் வாழ்வாதாரம முன்னேறிட சிறு தொழில் மானிய கடன் வழங்கிடு, மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடு என, வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஓசூர் சாராட்சியர் அலுவலகம் முன்பு சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் குமாரவடிவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முனி யப்பா, குண்டப்பா முனிசிவா, ருத்ரப்பா, ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர்  ஏ.வி.சண்முகம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்,தலைவர் முருகேஷ், பொருளாளர் எம்.எம். ராஜு,மாவட்ட குழு முரளி, பொருளாளர் பிரகாஷ்,தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார் கலந்து கொண்டனர்.