கடலூர்,அக்.5- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்களின் கூட்டம் கடலூரில் சுப்புலட்சுமி தலை மையில் நடைபெற்றது. சுகந்தி, ரீட்டா மேரி அஞ்சுகம், அன்னலட்சுமி, தாமரை, முத்துலட்சுமி, ரம்யா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கிராமப்புறங்களில் ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்காக 388 வட்டாரங்களில் 12,524 ஊராட்சிகளில் 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சுமார் 40,000 பெண்கள் மாதம் ரூ. 2000 என மிகக் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றி வரு கின்றனர். ஒரு ஊராட்சியில் 3 பேர் என்று இருந்த சமுதாய வள பயிற்றுநர்கள் எண்ணிக்கையை 2 என குறைப்பது எனவும் குறைந்தபட்ச கல்வித் தகுதி 12 ஆம் வகுப்பு என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்கள் வேலை இழக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆட் குறைப்பு நட வடிக்கையை அரசு கைவிட வேண்டும், தற்போது பணிபுரியும் ஊழி யர்களின் அனுபவங்களை கணக்கில் கொண்டு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என தீர்மானித்து அனை வரையும் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அக்.12 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.