districts

கீழ்ப்பாக்கத்தில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை, ஜூலை 28- கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 1200 மி.மீ விட்ட முள்ள உந்து குழாயில் மதகு வால்வு பொருத்தும் பணி  நடைபெறுவதால் 2 நாட்க ளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதன்படி, வால்வு பொருத்தும் பணி ஜூலை 30ஆம் தேதி காலை 8 மணி முதல் 31ந் தேதி இரவு 8 மணி வரை மேற்கொள்ளப் பட உள்ளது இத னால் கீழ்ப்பாக்கம் பகுதிக் குட்பட்ட வேப்பேரி, பெரிய மேடு, பூங்க நகர், சிந்தாதிரிப் பேட்டை, எழும்பூர், கொண்டித்தோப்பு, சவு கார்பேட்டை, ஏழு கிணறு, ஜார்ஜ் டவுன், பிராட்வே, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, பெரம்பூர், புளியந்தோப்பு, நம்மாழ் வார்பேட்டை, புரசை வாக்கம், செம்பியம், ஓட்டேரி, கெல்லீஸ், அயனா வரம், கீழ்ப்பாக்கம் தோட்டம், சேத்துப் பட்டு, டி.பி.சத்திரம், வில்லி வாக்கம் மற்றும் நுங்கம் பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாயின் மூலமாக வழங்கும் குடிநீர் விநியோகம் 2 நாட்கள் நிறுத்தம் செய்யப்படுகிறது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள தலைமை அலுவலக புகார் பிரிவு தொலைபேசி எண்.044-45674567-ல் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

;