சென்னை, மார்ச் 9- பின்னி மில் ஸ்டீபன்சன் சாலை, யானைகவுனி ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் பெரு நகர சென்னை மாநகராட்சி மேயருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி மண்டலம் 6 கோட்டம் 71க்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலை யில் (பின்னி மில் அருகில்) நல்லா கால்வாயில் 2019ஆம் ஆண்டு பழைய பாலம் தகர்க்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டது. பாலம் கட்டும் பணி துவக்கப்பட்டு சுமார் நான்கு ஆண்டு காலம் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் ஸ்டீபன் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள் ளது. ஸ்டீபன்சன் சாலை தடை செய்யப் பட்ட நேரத்திலேயே மண்டலம் 6க்குட்பட்ட பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் முரசொலி மற்றும் மேம்பாலத்தின் கீழ் உள்ள ரயில்வே தரைவழி சாலையும்போக்குவரத்து நிறுத்தப்பட்டு பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கணேசபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிக்காக அம்பேத்கர் கல்லுாரி சாலையும் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில் ஒரே நேரத்தில் மூன்று இடத்தில் சாலைகள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டதால் காலை, மாலை நேரங்களில் மக்கள் அதிகமாக செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதன் காரணமாக ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர், வியாசர்பாடி பகுதிகளில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஏற்கனவே யானைக்கவுனி மேம்பாலம் கட்டும்பணி சுமார் ஏழு ஆண்டுகளாக நடை பெற்று வருவதால் பேசின் பாலம் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புளியந்தோப்பில் இருந்து வள்ளளார் நகர் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்கு பேசின்பாலம் வந்து வியாசர் பாடி மேம்பாலம் வரை சென்று திரும்ப வரவேண்டியுள்ளது. அதேபோல் வால்டாக்ஸ் சாலையில் திரும்புவதற்கு வள்ளளார் நகர் பேருந்து நிலையம் வரை சென்று திரும்ப வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நேரமும், எரிபொருள் செலவும் கூடுதலாகிறது. மேலும், சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகனங்கள் மெதுவாகச் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய பாலம் கட்டும் பணியும், பழுது பார்க்கும் பணியும் தேவையான ஒன்று என்ற போதிலும் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பது மக்கள் போக்குவரத் திற்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகவே, நிலுவையில் உள்ள ஸ்டீபன்சன் சாலை நல்லா கால்வாய் பாலத்தையும், பல ஆண்டு களாக நிலுவையில் உள்ள யானைக்கவுனி மேம்பாலத்தையும் விரைந்து முடித்து மேற்படி சாலைகளை போக்குவரத்துக்கு பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் குறைக்க போர்க்கால அடிப்படையில் தீர்வுகாணுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.