districts

img

வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய உண்ணாநிலை போராட்டம்

கடலூர்,பிப்.13- துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப் பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணி யிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிடக்கோரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர்  மாநிலம் முழுவதும் செவ்வாயன்று(பிப்.13) உண்ணாநிலைப் போராட் டத்தில்   ஈடுபட்டனர்.  மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணி யிடங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்றது. கடலூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவல கம் அருகே மாவட்டத் தலை வர் பா.மகேஷ் தலைமை யில் நடைபெற்ற  போராட் டத்தை துவக்கி வைத்து வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கு. சங்கர லிங்கம் பேசினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஸ்ரீதரன், இரா.பூபாலச் சந்திரன், இரா.செல்வம், கு.ஜான் பிரிட்டோ, கோ. ராஜேஷ் பாபு, மாவட்ட செய லாளர் மு.ஆறுமுகம் உள்ளிட்ட்டோர் பேசினர். ம.சிவக்குமார் நன்றி கூறி னார். கள்ளக்குறிச்சி  கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட் டத்திற்கு மாவட்ட தலைவர் ஏ.காதர்அலி தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆர்.பாலமுருகன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்  கே. மகாலிங்கம் போராட்டத்தை துவங்கி வைத்தார். வரு வாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் எல்.அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம்  விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்செயலாளர் சங்கரலிங்கம்,  மாவட்ட செயலாளர் வேங்கடபதி உட்பட 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேலூர்  வேலூரில் ஆட்சி யர் அலுவலகம் முன்பு   மாவட்டத் தலை வர் டி.டி.ஜோஷி தலைமை யில் நடைபெற்ற உண்ணா நிலைப் போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், பொருளாளர் எம்.எஸ்.தீனதயாளன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதி யர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச்  செயலாளர் ஜி.சேகர்  மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.