districts

img

கிருஷ்ணகிரியில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் திறப்பு

கிருஷ்ணகிரி,டிச.24-  செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரியில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தினை அறங்காவலர் மருத்து வர் லாசியா முன்னிலையில் நிறுவனத் தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான தம்பிதுரை திறந்து வைத்தார். இயக்குனர் மருத்துவர் ராஜாமுத்தையா, மருத்து வர்கள் கண்காணிப்பாளர்  வாசுதேவன்,முதல்வர் சோம சேகர், இருப்பிட மருத்துவர் பார்வதி,கதிர் இயக்க வியல் துறை கிரிபிரபு,துணை பேராசிரியர் பிரசன்னா, மவுரிஸ்,சிந்து மோனிகா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். கிருஷ்ணகிரி,தர்மபுரி,திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகமானவர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது.எனவே அவர்கள் பயன்பெரும் வகையில் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையத்துடன் கூடிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை விரைவில் துவங்கப்பட உள்ளது என்று தம்பிதுரை கூறினார்.  இயக்குனர் ராஜா முத்தையா கூறுகையில் சென்னை பெங்களூர் பெருநகரங்களில் இருக்கக்கூடிய எம் ஆர் ஐ மையங்களுக்கு நிகரான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மையம் முதல்முறையாக இங்கு நிறுவப்பட்டுள்ளது.அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் 50 விழுக்காடு சலுகை விலையில் ஸ்கேன் பார்க்கப்படும் என்றார்.