திருவள்ளூர், அக் 16- தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, கவரைப்பேட்டை பகுதியில் சர்வீஸ் சாலைகளில் ஏற்பட்டுள்ள மரண குழிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் நீந்தி செல்கின்றன. சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிப்பு செய்யாததால் மணிக்கு ஒரு தடவை போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இத னால் பொது மக்கள் மிகவும் சிரமப்படு கின்றனர். கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரைப்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சர்வீஸ் சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. தச்சூர் கூட்டுச் சாலையில் பகுதியில் உள்ள சர்வீஸ் சாலை முற்றிலும் சேத மடைந்து மழைநீர் தேங்கியுள்ளதால் அச்சாலை மூடப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.