districts

img

எஸ்.ஆர்.எம் மாணவிக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை: முதல்வர் வழங்கினார்

சென்னை,மார்ச் 20- திறன்மேம்பாட்டு தேசிய போட்டி யில் முதலிடம் பிடித்த எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் மாணவிக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கி பாராட்டினார். ஒன்றிய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சார்பில் இந்திய திறன் மேம்பாட்டு போட்டி அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 200 நிறுவனங்களை சேர்ந்த 500 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  இவர்களுக்கு கார் பெயிண்ட், வெல்டிங், கூட்டு உற்பத்தி,சைபர் செக்யூரிட்டி, இனிப்பு ரகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 54 விதமான தொழில்களில் திறன் மேம்பாட்டு சம்மந்தமான போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் பங்கேற்ற செங்கல் பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் அங்கமான எஸ்.ஆர்.எம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவி எஸ். அனுஸ்ரீ முதலிடம் பெற்று சாதனை படைத்தார். இதற்காக அவருக்கு தங்க பதக்கமும் பரிசு தொகையாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி எஸ். அனுஸ்ரீ தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு போட்டியில் சாதனை படைத்தமைக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ். அனுஸ்ரீக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார்.