districts

img

எஸ்.ஆர்.எம். அறிவியல் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை

சென்னை,ஆக.10-

     வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம்  அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப நிறுவனத்தின், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை துவக்க விழா  வியாழக்கிழமை (ஆக.10)  நடைப் பெற்றது.

     ராப்ஸோடி நிறுவனர் அனில் ஸ்ரீனிவாசன்  புதிதாக கல்லூரியில் இணைந்த மாணவ, மாணவியரை வாழ்த்திப்பேசினார்.    செயற்கை நுண்ணறிவு,  இணைய மயமாக்கல், மருத்துவத்துறை, பொழுதுபோக்கு மற்றும் இசை துறையில் பொறியியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மற்றும் வளர்ந்து வரும்  தொழில்நுட்பங்களில் உள்ள ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்கள், வேலை வாய்ப்புகள் பற்றி அவர் உரை நிகழ்த்தினார்.  

    இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் சி. முத்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். வடபழனி வளாக, புல முதல்வர் முனைவர்.சி.வி.ஜெயக்குமார், அனைவரையும் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் சி.கோமதி,  நன்றி கூறினார்.