மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்திட வரவேற்பு அமைப்புக் குழு அமைக்கப்பட்டது, இந்த கூட்டத்தில், மாநில மாநாடு வரவேற்பு குழு சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் குழுத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி, செயலாளர் என்.சுப்பிரமணியன், பொருளாளர் பி.குமார் ஆகியோர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆகியோரிடம் மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.3 லட்சம் வழங்கினர். இதில் வரவேற்பு குழு நிர்வாகிகள் எஸ்.முத்துக்குமரன், ஆர் மூர்த்தி, எஸ் . வேல்மாறன் உட்பட பலர் உடனிருந்தனர்.