சென்னை, அக்.2- இந்திய விமானப் படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தை யொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வருகிற ஞாயிறன்று (அக்.6) விமான சாகச நிகழ்ச்சி நடை பெறுகிறது. ஞாயிறு காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிப்ப தற்காக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரள் வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. விமான சாகச நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வருபவர்கள் கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப் பட உள்ளது. மெரினா காமராஜர் சாலை யில் அன்று காலையில் இருந்தே போக்குவரத்தை நிறுத்தி பொது மக்களை மட்டும் அனுமதிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கூட்ட நெரி சலை பயன்படுத்தி குற்றச்செயல் களில் ஈடுபடுபவர்களை பிடிக்க வும் போலீசார் ரகசியமாக கண்காணிக்க உள்ளனர். புத்தாண்டு மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது போல அன்றைய தினம் மெரினாவில் மக்கள் கொண்டாட் டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களை மேற்கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ள னர். விமான சாகச நிகழ்ச்சியை யொட்டி 3 நாட்கள் ஒத்திகை நிகழ்ச் சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இதன்படி புதனன்று 2-வது நாளாக ஒத்திகை நடத்தப்பட்டது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வருகிற 4-ந்தேதி கடைசி நாள் ஒத்திகை நடத்தப் படுகிறது. இதன் பின்னர் சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.