districts

img

காஞ்சிபுரத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், ஆக 16 - காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்ற சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதம் தோறும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் பல்வேறு  பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக் கும் மேற்பட்ட தொழிற் சாலை மனிதவள மேம்பாட்டு பிரதிநிதிகள் தங்கள் தொழிற்சாலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் தனியார் தொழிற்சாலைகள் பங்கேற்கும் சிறப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மைய அலுவலக வளாகத்தில், சிறப்பு வேலை வாய்ப்பு முகாமை இணை இயக்குனர் அருணகிரி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 18 தொழிற்சாலைகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து  கொண்டு சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் ஆட் களை தேர்வு செய்தனர். இம் முகாமில் 400க்கும் மேற்பட்டோர் தங்கள் சுயவிவரக் குறிப்புகளை அளித்து பதிவு செய்து கொண்டனர். நேர்காணலில் தேர்வு  செய்யப்பட்ட 31 நபர் களுக்கு மண்டல வேலை வாய்ப்பு மற்றும் தொழில்  நெறி வழிகாட்டு மையத் தின் இணை இயக்குனர் தேவேந்திரன் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங் கினார்.  89 நபர்கள் இரண் டாம் கட்ட நேர்காணல்  தேர்வுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டு அவர்களுக்கு அதற் கான கடிதம் வழங்கப் பட்டது. வேலைவாய்ப்பு முகாம்  குறித்து தனியார் தொழிற் சாலை பிரதிநிதிகள் தெரி விக்கையில், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் களில் பங்கேற்கும் நபர்கள் சுயவிவர குறிப்புகளை முழு மையாகவும், அதே  நேரத்தில் தொழிற்சாலை கள் தேர்வு செய்வதில் கவ னம் கொள்ள வேண்டும் என  தெரிவித்தனர்.