districts

img

ஜிபே, போன்பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சிறப்பு குழுக்கள்

சென்னை, மார்ச் 10- நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் களுக்கு இந்தமுறை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது.    தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப் பரிமாற்றம் நடக்க லாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.    வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதை தவிர ஜிபே, போன்பே மூல மாகவும் பணம் கொடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப் பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரி வாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உரு வாக்கி இருக்கிறார்கள். டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்கா ணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை யையும் வருமான வரித்துறை அமைத் துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் விநியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன.