புதிய வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் திருமுண்டீஸ்வரர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் சி.பழனி தொடங்கி வைத்தார். ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கு.ஓம்.சிவசக்திவேல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பொற்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.