districts

img

தென்சென்னை இளம்பெண்கள் மாநாடு

சென்னை, ஜூன் 4 -

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட இளம்பெண்கள் மாநாடு ஞாயிறன்று (ஜூன் 4) வடபழனியில் நடைபெற்றது.

    சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பணியிடங்களில் பாலியல் புகார்  குழுக்களை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாடில் நிறை வேற்றப்பட்டன.

    இந்த மாநாட்டை வழக்கறிஞர் திலகவதி  தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, மாநிலக்குழு உறுப்பினர் அ.ஜானகிதேவி, செயற்குழு உறுப்பினர் நிவேதிதா, மாவட்டக்குழு உறுப்பினர் ஸ்வேதா உள்ளிட்டோர் பேசினர்.

   சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.எஸ்.பாரதி நிறைவுரையாற்றினார். இளம்பெண்கள் உபகுழுவின் ஒருங் கிணைப்பாளராக அ.ஜானகிதேவி தேர்வு செய்யப்பட்டார்.