districts

img

தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுசீலா நினைவேந்தல் கூட்டம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுசீலா நினைவேந்தல் கூட்டம் செவ்வாயன்று (டிச.12) கே.கே.நகரில் நடைபெற்றது. தமுஎகச தென்சென்னை மாவட்டக் குழுவும், டிஸ்கவரி புக் பேலசும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின. தமுஎகச மாவட்டத் தலைவர் சி.எம்.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமுஎகச மூத்த தலைவர் ச.தமிழச்செல்வன், மாநில நிர்வாகிகள் ரோகிணி, கி.அன்பரசன், நாடகவியலாளர் பிரளயன், இரா.சுதன் ஐஏஎஸ் (ஓய்வு) உள்ளிட்ட பலர் பேசினர்.