ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கொடைக்கல் ஊராட்சிக்குட்பட்ட பெருங்காஞ்சி கிராமத்தில் பட்டியலின கல்லூரி மாணவன் கதிர்வேல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் குற்றவாளிகள் மீது எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும் மக்கள் தமிழகம் கட்சி சார்பில் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எபிஎம். சீனிவாசன், தலைவர் பி. ரகுபதி, மக்கள் தமிழகம் கட்சி பொதுச் செயலாளர் செவ்வேல் உள்ளிட்ட பலர் இதில் கண்டன உரையாற்றினர்.