சென்னை, ஆக. 18-
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் சுமார் 15,000 பேர் பணி இழக்கும் சூழ்நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மின் இணைப்புகளின் பயன்பாட்டைக் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை ஒன்றிய அரசின் உதவியுடன் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது மின்சார பயன்பாட்டை அளவிட ‘ஸ்டேடிக்’ எனும் டிஜிட்டல் அளவீடு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வரு கின்றன.
அதன்படி ஸ்மார்ட் மீட்டர்கள் மின்வாரிய சர்வருடன் இணைக்கப்படுவதால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தானாகவே மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து நுகர் வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவித்து விடும். மின் பயன்பாடு மிகவும் துல்லியமாக இருக்கும் என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் தானாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இணைப்புகளுக்கும் மின் மீட்டர் பொருத்தும் செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று கூறியுள்ளது. மின் வாரி யத்தில் உள்ள செலவினங்களைக் குறைக்க வும் மின் பயன்பாட்டு கணக்கீட்டில் வெளிப் படைத்தன்மை இருக்கவும் இந்த நட வடிக்கை எடுக்கப்படுவதாக அரசு கூறி யுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தில் 15,000 பேர் வரை வேலை இழக்கும் சூழல் ஏற்படும் என்று கூறப்படு கிறது.
ஏனெனில் தற்போது மின் ஊழி யர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து கணக்கீடு செய்கின்றனர். ஸ்மார்ட் மீட்டர் மென்பொருள் தானாகவே கணக்கீடு செய்துவிடும் என்ப தால் ஊழியர்களுக்கு வேலை பறிபோகும் சூழல் ஏற்படும்.
இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகை யில், மின் துறை தனியார் மயமாக்கப்பட லாம் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்ததால், இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு, ஒன்றிய அரசிடம் கூடுதல் அவ காசம் கேட்டுள்ளது. மேலும் கேரள அரசைப் போன்று ஊழியர்களுக்கு வேலை உத்தர வாதத்தை தமிழ்நாடு அரசும் அளிக்க வேண்டும் என்றார்.