districts

இறுதி கட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள்

சென்னை,பிப்.13- சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டப் பணிகள் 2016 ஆம் ஆண்டு முதல்  நடைபெற்று வருகிறது. தியாகராய நகரி லுள்ள பாண்டி பஜார் பகுதிகள் மேலை நாடுகளில் உள்ளது போன்ற உள்கட்ட மைப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல அடுக்கு கார் பார்க்கிங், கொண்டு  வரப்பட்டது. நீர் நிலைகள் மேம்படுத் தப்பட்டன. மழைநீர் வடிகால் பணிகள் நவீன  தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக செயல்படுத்தப்பட்டன.  வில்லிவாக்கம் ஏரியில் சாக்கடை நீர்  கலப்பதை தடுத்து அங்கு மழைநீர் சேமித்து  தற்போது உயர் மட்ட கண்ணாடி மேம்பால மும் அமைக்கப்பட்டது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான நவீன பூங்காவும் சாந்தோமில் உருவாக்கப்பட்டது. பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டன.  இப்படி பல்வேறு பணிகள் நடந்த நிலை யில் இப்போது ஒரு சில பணிகள்தான் முடி வடையாமல் இறுதி கட்டத்தில் உள்ளது. அதில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் பின்புறம் கட்டப்பட்டு வரும் பசுமை கட்டிடம் பணிகள் இப்போது வேகப் படுத்தப்பட்டு உள்ளது. முழுக்க முழுக்க  நவீன தொழில்நுட்ப சோலார் வசதிகளுடன்  உருவாக்கப்படும் இந்த பசுமை கட்டிடத்தின் பணிகளும் இன்னும் 2 மாதத்தில் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும். அதேபோல், மாம்பலம் ரயில் நிலை யத்திலிருந்து தி.நகர் பேருந்து நிலையத் திற்கு நடந்து செல்லும் உயர்மட்ட மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில்  இறங்கும் இடத்தில் ‘லிப்ட்’ அமைக்கும் பணிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த மாதத்தில் முடிந்துவிடும். இதேபோல் மாம்பலம் கால்வாய் தூர் வாரப்பட்டு அதை அகலப்படுத்தி கரைகளை  பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட உள்ளது.