districts

img

நீட், ஜே இ இ தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக ஸ்மார்ட்’ திரை

வேலூர், ஆக. 3- வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்பு லட்சுமி தலைமையில் நடைபெற்றது.  அப்போது, 2023-24 ஆம் கல்வி யாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற, பெறாத மாண வர்கள் விவரம் குறித்து 158 பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பிறகு, ஆட்சியர் பேசுகையில், “10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவர்கள் உயர் கல்வியில் சேராதவர்கள் கல்வித் தகுதிக்கேற்ப வேலூர் தொழிற்பயிற்சி நிலையம், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் படிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஆக. 7 அன்று காட்பாடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மற்றும் குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் இருந்து மாணவர்களை அழைத்து வரவேண்டும்” என்றார். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் பங்கேற்பது குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் ‘ஸ்மார்ட்’ திரை வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரி வித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா, மாவட்ட கல்வி அலுவலர்கள் தயாளன், தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.