திருவள்ளூர், பிப் 4- திருவள்ளூர் நக ராட்சிக்குட்பட்ட சி.வி நாயுடு சாலையில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பூங்கா பயன்பாட்டில் இருந்து வந்தது. நல்லெண்ணம் படைத்த சி.வெங்கடாஜலபதி குடும்பத்தினர் ஒரு ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு தானமாக வழங்கிய இடத்தில் உள்ள பூங்காவை அழித்து விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணியை நிறுத்தக்கோரி அனைத்துக்கட்சிகள் சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அரு கில் செவ்வாயன்று (பிப்.4) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய அனைத்து கட்சி களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் கோபால் பேசுகையில், , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பூங்கா வில் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. ஓய்வு எடுக்கும் இடமாக இருந்தது. தான பத்திரத்தை கூட படிக்காமல் பூங்காவை சட்டத்திற்கு புறம்பாக அராஜகமான முறையில் வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது கண்டிக்கத்தக்கது என்றார். ஆக்கிரமிப்பு என்று கூறி குடியிருக்கும் வீடுகளை அகற்றும் அரசு, சட்ட விரோதமாக கட்டடம் எழுப்புவதை கைவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பூங்காவை மீட்கும் வரை போராடுவோம் என்றும் அவர் கூறினார். ப. சுந்தரராசன் திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தரராசன் போராட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், திருவள்ளூர் நகராட்சி வளர்ந்து வருகிறது. வெளியூரிலிருந்து வரும் பயணிகள் பெயர் பலகையை பார்த்து தான் இது திருவள்ளூர் என தெரிந்துகொள்ள தேவையில்லை. புட்லூரை நெருங்கினாலே அடுத்து திருவள்ளூர் தான் என தெரிந்து விடும். அந்த அளவிற்கு கழிவுநீர் சாக்கடையின் துர்நாற்றம் வீசுகிறது. இவற்றையெல்லாம் சீரமைக்காமல், பூங்காவை அழித்து சட்ட விரோதமாக வணிக வளாகத்தை நகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது. இதனை அனு மதிக்கமாட்டோம். போராடி பூங்காவை மீட்போம் என்றார். மதிமுக பாபு திருவள்ளூர் நகராட்சி யில், நகர் மன்ற தலை வராக திமுக வினர் உள்ள னர். எதிர் கட்சியாக அதி முக உள்ளது. இருவரும் சேர்ந்து கூட்டு கொள்ள யடிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். நல்லது செய்தால் வரவேற்போம், அநியாயம் செய்தால் போராடுவோம்என்றார். தளபதி சுந்தர் விசிக மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர் பேசுகையில், தானமாக கொடுத்த இடத்தில் அரசின் நேரடி திட்டமாக வணிகவளாகம் கட்டுவதை அனுமதிக்கமுடியாது என்றார். கஜேந்திரன் சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் பேசும் போது, சட்ட விரோதமாக பூங்காவை அழித்து கட்டப்படும் கட்டுமானங்களை மாநில அரசே இடித்து தள்ளி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறினார். முன்னதாக சிபிஎம் திருவள்ளூர் வட்டச் செயலாளர் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழு செயலாளர் நீலவானத்து நிலவன் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.கீதா, இ.எழிலரசன், மூத்த தோழர் கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.