சென்னை, நவ. 9 - திரிசூலநாதர் கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு வாடகை நிர்ணயம் தொடர்பாக அறநிலையத்துறை காஞ்சிபுரம் இணை ஆணையரிடம் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு அளித்தனர். திரிசூல நாதர் கோவிலுக்கு சொந்த மான நிலத்தில் நூற்றுக்கணக்கான பயனாளிகள் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற அறநிலையைத் துறை நடவடிக்கை எடுத்தது. அறநிலையத்துறை சட்டம்-1959, பிரிவு 34-ஏ அடிப்படையில் குடி யிருப்போரை வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்த சங்கம் வலி யுறுத்தியது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணைய நீதிமன்றத்தில் பயனாளிகள் மேல்முறையீடு செய்தனர். அதன்பிறகு, காஞ்சிபுரம் இணை ஆணையர்களாக இருந்த பொன்.ஜெயராமன், வான்மதி ஆகியோர் பயனாளிகளிடம் விசாரணை நடத்தி னர். அதன்பிறகு 300க்கும் மேற்பட்ட பயனாளிகள் ஆணைய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவற்றை விசாரித்த ஆணை யர் குமரகுருபரன், பிரிவு 34ஏ மற்றும் அரசாணைகள் 340, 353/99 456/07, 298/10 மற்றும் சுற்றறிக்கை களின் அடிப்படையில் 304 பயனாளி களை வாடகைதாரர்களாக வரன்முறைப்படுத்த 4 உத்தரவு களை பிறப்பித்தார். அவற்றை நடை முறைப்படுத்தும் பணி கடந்த ஓராண்டுகளாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், திரிசூலம் அம்மன் நகர், சாமி நகர், பூங்கா நகர், இந்திரா நகர், ஜே.ஜே. நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடை பெற்றது. அதனை தொடர்ந்து வியாழனன்று (நவ.7) காஞ்சிபுரம் இணை ஆணையர் தர்மதுரையை சந்தித்து சங்கத்தின் மாநில தலைவர் வ.செல்வம் மனு அளித்து பேசினார். இந்நிகழ்வின்போது, தென்சென்னை மாவட்ட செயலாளர் எம்.நடராஜன், பொருளாளர் ஏழு மலை, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ஆறுமுகம், கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.