districts

img

சாதிய வன்மத்துடன் குறவன் இனமக்கள் மீது அவதூறு பிரச்சாரம்

ராணிப்பேட்டை,டிச.20 – சாதிய வன்மத்துடன் குறவன் இன மக்கள் மீது அவதூறு பரப்பும் தி கே டிவி என்ற தனியார் யூடியூப் சேனலை தடை செய்து அதன் உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியா ழனன்று (டிச. 19) ராணிப்  பேட்டை முத்துக் கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட செய லாளர் வ.வினோத் தலை மையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லி பாபு, குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் ஏ.வி. சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கம் மாநில துணைச் செயலாளர் ஆர். தமிழ் அரசன், மாநில குழு உறுப்பினர் வி.கே. தணிகாசலம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரகுபதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தா. வெங்கடேசன், ஆர். மணிகண்டன், ஆர். திலகா, மலைவாழ் மக்கள் சங்கம் மாவட்டச் செயலாளர் எம். குமார், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் சி.ராதாகிருஷ்ணன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி. சந்திரன், கட்டுமானம் சங்க மாவட்டச் செயலாளர் த.ஞானமுருகன் உள்ளிட்  டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.