திருவண்ணாமலை,ஜூலை 27- திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா பன்னாட்டுப் பள்ளியில் நடைபெற்ற முதலீட்டு விழாவுக்கு கல்வி குழுமத்தின் தலை வர் கருணாநிதி தலைமை வகித்தார். குழுமத்தின் இணைச் செயலாளர் அரங்கசாமி மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் சக்தி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவத் தலைவி பவித்ரா வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியில் நடை பெற்ற சதுரங்கப் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கப் பட்டது. கவிதை, கட்டுரை, மாறுவேடப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி நிறைவுரையாற்றினார். மாணவத் தலைவன் நோவா அருள் நேசன் நன்றி கூறினார். பி.ஆர்.ஒ சையத் ஜஹிருத்தீன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.