சென்னை, செப். 1- கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வேட்டைக்கு துணை போகும் ஆட்சி யாளர்களின் கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர் சங்க மாநாட்டில் எஸ்.கே.மகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார். ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட 41ஆவது மாநாடு ஓட்டேரியில் தோழர் சு.லெனின் சுந்தர் நினைவரங்கில் ஞாயிறன்று (செப். 9) நடைபெற்றது. சங்க கொடியை இ.எஸ்.பிரபாகரன் ஏற்றினார். செயல் தலைவர் ஏ.செல்வராஜ் வர வேற்றார். பி.மாரிமுத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தலைவர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின் ஆன்லைன் அபராதம், சுங்கக் கட்டணம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் கொள்ளை அடிக்கிறது. மாநகராட்சி எல்லைக்குள் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது விதி. அதேபோல் ஒரு சுங்கச் சாவடிக்கும் அடுத்த சுங்கச் சாவடிக்கும் இடையே 60 கி.மீ. இடை வெளி இருக்க வேண்டும். ஆனால் போரூர், சூரப்பட்டு, மணலி ஆகிய 3 சுங்கச் சாவடிகளுக்கு இடையே 20இல் இருந்து 25 கி.மீட்டர் தான் இடைவெளி இருக்கிறது. அப்படியென்றால் ஒரு வாகனம் 100 கி.மீ. கடந்து செல்வதற்குள் 3 முறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. வாகனம் வாங்கும் போதே சாலை வரி செலுத்துகிறோம். பின் எதற்கு சுங்கக் கட்டணம் என்று கேள்வி எழுப்பினார். எனவே நாம் நம் கோரிக்கைகளுக்காக போராடினால் மட்டும் போதாது, ஆட்சி யாளர்களின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார் எஸ்.கே.மகேந்திரன். மாநாட்டில் செயலாளர் வி.ஜெய கோபால் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் எஸ்.காதர் உசேன் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். ஆட்டோ சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் எம்.சந்திரசேகர் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். பி.கிருஷ்ணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் சொந்த வீடு இல்லாத ஆட்டோ தொழி லாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தலைவராக எஸ்.கே.மகேந்திரன், செயல் தலைவராக ஏ.செல்வராஜ், செய லாளராக வி.ஜெயகோபால், பொரு ளாளராக வி.திருநாவுக்கரசு உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.