தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
திருவள்ளூர், நவ.13- மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை யில் தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து, ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கடந்த 2010 ஆம் ஆண்டு கடல் நீரை குடி நீராக்கும் ஆலை செயல்பாட்டிற்கு வந்தது, இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் கடல் நீர் குடிநீராக சுத்திகரிக்கப்பட்டு குழாய் மூலம் கொண்டு சென்று சென்னை மக்களுக்கு விநியோகிக்கும் பணியினை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது, மேலும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் இதன் உற்பத்தி திறனை நாள் ஒன்றுக்கு 247 மில்லியன் லிட்டராக அதிகரிக்க தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது. இங்கு கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலம் சென்னைக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை 50க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர், இந்த நிலையில் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அலுவலக ஊழியர்கள் 8 பேருக்கு மட்டும் போனசை வழங்கிய தமிழக அரசு பிற தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சக தொழி லாளர்கள் அரசை கண்டித்து குடிநீர் உற்பத்தியை நிறுத்திவிட்டு கடல்நீர் சுத்தி கரிப்பு ஆலைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் சென்னை அதன் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது.
போதை பொருள் விற்பனை செய்த இருவர் கைது
சென்னை, நவ. 13- பெங்களூருவில் இருந்து போதைப் பொருட்களை கொண்டுவந்து சென்னை யில் விற்பதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், செவ்வாயன்று இரவு அயனாவரம் பகுதியில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருள் மற்றும் 5 எல்எஸ்டி ஸ்டாம்ப் போதை பொருள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை அயனாவரம் காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபோது பெரம்பூர் பாரதி ரோடு பகுதியை சேர்ந்த மார்ட்டின் ஜோஸ்வா (31) என்பதும், டெய்லராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவர் பெங்களூருவில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மார்ட்டின் கொடுத்த தகவல்படி, சேலத்திலிருந்து ரயில் மூலம் வந்த சூர்யாவை கைது செய்து அவரிடம் இருந்து 23 எல்எஸ்டி ஸ்டாம்ப் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மெத்தபெட்டமைன் ரூ.4 ஆயிரம் வரையும், எல்எஸ்டி ஸ்டாம்ப் எனும் போதை பொருளை ஒரு ஸ்டாம்ப் ரூ.3,500க்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பயிற்சியின் போது மாரடைப்பு: சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
ஆவடி, நவ. 13- ஆவடியில் புதனன்று நடைபெற்ற பயிற்சி யின் போது, மாரடைப்பு ஏற்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆவடி அருகே பட்டாபிராம் அமுதூர் மேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வர் பிரபாகரன் (53). இவர் ஆவடி மத்திய குற்றப்பிரி வில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கடந்த 4ஆம் தேதி முதல் பிரபாகரன் ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் உதவி ஆய்வாளர் பதவிக்கான பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் புதனன்று(நவ.13) காலை வழக்கம் போல் பயிற்சியில் இருந்த போது, பிரபாகரன் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை காவல் அதிகாரிகள் மீட்டு, ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு வரும் வழியிலேயே பிரபாகரன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி காவல் துறையினர் பிரபாகரன் உடலை மீட்டு, உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பிரபாகரனுக்கு ஜெயசிலாராணி என்ற மனைவியும், மகள் பிரியதர்சினி (23), மகன் ஜெயபிரகாஷ் (22) ஆகியோர் உள்ளனர். பயிற்சியின் போது சிறப்பு உதவி ஆய்வாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக காவல் அதிகாரிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி உதவித்தொகை பெற காவலர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, நவ.13- சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2024-25ம் கல்வி ஆண்டிற்கான, நூற்றாண்டு கல்வி உதவிதொகை பெற விண்ணப்ப படிவங்கள், வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அவர்களின் மாத ஊதியத்தில் காவலர் சேமநல நிதி சந்தா தொகை தவறாமல் பிடித்தம் செய்யப்படுகிறது என்பதற்கான சான்று மற்றம் வாரிசுகளின் 12ம் வகுப்புக்கான மதிப்பெண் சான்று ஆகியவற்றை படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பெற்று தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும் போது, சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிட மும், சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவ லர்கள் சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணை யரிடமும் மற்றும் மண்டல அலுவலகங்க ளில் பணிபுரியும் காவலர்கள் சம்பந்தப்பட்ட காவல் இணை ஆணையரிடடுமும் சான்றொப்பம் பெற்று அனுப்பவும். மேலும், விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அனைத்து காவலர்கள் விண்ணப்பத்துடன் சம்பள பட்டியல் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலினை தவறாமல் இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு சிறப்புக்குழு உயர்நீதிமன்றத்தில் மாநிலஅரசு தகவல்
சென்னை, நவ.13- ‘மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, பாலியல் தொல்லைகளில் இருந்து அவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக பதியப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாகக் கூறப்படும் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சீலிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அப்போது மனுதாரரான வழக்கறிஞர் சூர்யபிரகாசம், “திருச்செந்தூரில் மாணவி ஒருவருக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்,” என்றார். அதற்கு அரசுத் தரப்பில், “பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மாணவிகளின் பாதுகாப்புக்கு பள்ளிகளில் சிறப்புக் குழு அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் பாலியல் தொல்லைகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.
மதுக்கூடத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
அண்ணாநகர், நவ.13- அரும்பாக்கம் 100 அடி பிரதான சாலையில் டாஸ்மாக் பார் உள்ளது. திங்களன்று இரவு இங்கு வந்த வாலிபர், அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, பார் வாசலிலேயே படுத்துறங்கினார். இதை பார்த்த பார் ஊழியர்கள், அவரை எழுப்பி வீட்டிற்கு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், பார் ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து சென்ற அவர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்து, கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை பார் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பினார். அப்போது, பெட்ரோல் குண்டு வெடித்து, அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்து அங்கிருந்த குடிமகன்கள் அலறியடித்து ஓடினர். உடனே பார் ஊழியர்கள், தீயை அணைத்தனர். பின்னர், இதுபற்றி அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிய வாலிபரை பிடித்தனர்.
விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம்,நவ.13- விழுப்புரத்தில் வரும் 15-ந்தேதி தனியார்துறை வேலை வாய்ப்புமுகாம் நடக்கவுள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மைய உதவி இயக்குநர் பால முருகன் தகவல் தெரி வித்துள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில்20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனி யார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனங்களில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ., டிப்ளமோ, பிஇ.,பிடெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வி தகுதியுடைய வேலை தேடுபவர்கள் இந்தமுகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் தேர்வு செய்யப்படுபவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே தனியார் துறையில் பணிவாய்ப்பினை பெற விரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் அசல் கல்வி சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் மீதும் தாக்குதல்
சென்னை,நவ.13- சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் மனநல மருத்துவர் தாக்கப் பட்டதாக புகார் எழுந்துள்ளது. மனநல மருத்துவர் ஹரிஹரன் மீது நோயாளி தாக்குதல் நடத்தியதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை முதல்வர் பாலாஜி அந்த புகாரை அளித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளி புதன்கிழமை (நவ.13) சிகிச்சைக்கு வந்தபோது மருத்துவர் மீது தாக்குதல் நடத்தி விட்டு ஓட்டம்பிடித்துள்ளார். இந்நிலை யில், காயமடைந்த மருத்துவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரே நாளில் 2 அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.