திருவள்ளூர், மே 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறுவாக்கம் கிளை செயலாளர் தோழர் எம்.ஜெய ராஜ் (வயது 35), விபத்தில் கால மானார்.அவரின் உடல் வியாழ னன்று (மே 9) அடக்கம் செய்யப் பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள சிறுவாக்கம் கிராமத்தில் தோழர் முனுசாமி, சிஐடியு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகியாக இருந்து பணியாற்றி வந்தார். வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 4 ல் கடந்த 8 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த அவர் வழக்கம் போல் புதனன்று (மே 8), பணிக்கு சென்றார். அப்போது பணி தளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது, லாரி மோதி இறந்ததாக நிர்வாகம் தெரிவித் துள்ளது. தோழர் ஜெயராஜ் மரணமடைந்த செய்தி அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. இரண்டு முறை கட்சியின் கிளை செயலாளராக இருந்து மக்கள் நலனுக்காக பல போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இலவம்பேட்டில் நடைபெற்ற இரண்டு சக்கர வாகன பிரச்சா ரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஆர்வமுடம் கலந்து கொண்டு ஜெயராஜ் சிறப்பாக செயல் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன், பொன்னேரி பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் இ.ஜெயவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், பி.கதிர்வேல், இ.தவமணி, டி.மதன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் ஜெயராஜூ அபிநயா என்ற மனைவியும், மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரின் உடல் சிறுவாக்கம் மயானத்தில் வியாழனன்று அடக்கம் செய்யப்பட்டது.