புதுச்சேரி காரைக்கால் திருப்பட்டினம் பகுதியினைச் சேர்ந்த சிங்காரவேல், சுதா தம்பதியின் மகன் சந்தோஷ் (வயது12) படுகொலை செய்யப்பட்டார். சிறுவனின் குடும்பத்தாருக்கு முதல மைச்சர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அமைச்சர் திருமுருகன் பரிந்துரை ஏற்று, முதல்வர் ரங்கசாமி புதனன்று ரூ.5 லட்சத்திற்கான காசோலையை சிறு வனின் பெற்றோரிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர் திருமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.