districts

img

அடையாள அட்டை வழங்குக பட்டு கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை,பிப். 9- ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் கிராமத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்க கூட்டம் தலைவர் ஜி. ராஜ சேகர் தலைமையில் நடை பெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். வெங்கடேசன், திரு வண்ணாமலை மாவட்டத் தலைவர் எம். வீர பத்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பி. ரகுபதி, எஸ்.கிட்டு, செயலாளர் பி.தேவன், பொருளாளர் கோபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் தேசிய கைத்தறி அடையாள அட்டையை உடனே வழங்க வேண்டும். நெசவாளர்கள் அனைவருக்கும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும் கைத்தறி உபகரணங்கள் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.