districts

img

பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆரணியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஆக. 8- தேசிய கைத்தறி நெசவாளர் தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  ஆரணி அண்ணா சிலை அருகே நடைபெற்றது.  சிஐடியு தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, கே. காங்கேயன், எஸ். முரளி, சி. அப்பாசாமி, பெ.கண்ணன், ரமேஷ் பாபு, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தேசிய கைத்தறி நெசவாளர் அடை யாள அட்டை நெசவாளர்களுக்கு வழங்க வேண்டும், கைத்தறி பட்டு சேலைகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும், 1985 கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.