districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

பூந்தமல்லி நெடுஞ்சாலை நெய்வேலி பேருந்து நிறுத்தத்தில் மீண்டும் பேருந்துகளை நிறுத்த வேண்டும், புல்லாபுரத்தில் மின்கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், கழிவு நீர் பிரச்சினைக்கு தீர்வு காண குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புல்லாபுரம் கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், செயற்குழு உறுப்பினர் வே.ஆறுமுகம், பகுதி குழு உறுப்பினர்கள் பி.கே.மூர்த்தி, நாகராணி, சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.